பாடல் #412

பாடல் #412: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்
தானே உலகினில் தலைவனு மாமே.

விளக்கம்:

உலகத்தை படைத்து அதனைக்காக்க இறைவன் ஒருவனே பத்து திசைகளாகவும் (எட்டுத் திசைகள், மேல், கீழ்) அவற்றைக் காத்து நிற்கும் தேவர்களாகவும் அனைத்து உயிர்களின் ஸ்தூல உடலாகவும் சூட்சும உயிராகவும் அவை இரண்டும் உணர்த்தும் இருபத்து நான்கு வகை தத்துவங்களாகவும் காணுகின்ற கடல் போன்ற நீர் நிலைகளாகவும் மலை போன்ற நிலப் பரப்புகளாகவும் அனைத்திற்கும் முதலாகவும் உலகத்திலுள்ள அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான்.

One thought on “பாடல் #412

Leave a Reply to கங்காதரன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.