பாடல் #338

பாடல் #338: இரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (அகம் + இயம்= அகத்தியம். உள்ளேயிருக்கும் ஒலி)

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடும்
அங்கி உதயம் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்குஒளி தானே.

விளக்கம்:

உடலில் இருக்கும் ஒலியானது உடம்பில் தோன்றும் அக்னியை வளர்த்து அந்த அக்னியை குண்டலினி மூலம் மேல்நோக்கி தலைக்கு கொண்டு சென்று வலது புறமாக நகன்று இடப்பக்கம் தலை முழுவதும் பரவச்செய்தால் உடலோடு இருக்கும் உயிரிடம் அருள் தன்மை வளம் நிறைந்து ஒளியுடன் இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.