பாடல் #276: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)
முன்படைத் தின்பம் படைத்த முதலிடை
அன்படைத் தெம்பெரு மானை அறிகிலார்
வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில்
அன்படைத் தான்றனர் அகலிடந் தானே.
விளக்கம்:
உயிர்களை உலகத்தில் படைக்கும் முன்பே அன்பையும் அதன் மூலம் பெறும் இன்பத்தையும் படைத்த முதல்வனாகிய இறைவனை தூய்மையான அன்பினால் கண்டு உணர முடியாதவர்கள் கேடு நிறைந்த இந்த பெரிய உலகத்தில் உலகப் பற்றுக்களின் மேலேயே அன்பு ஆசை வைத்து இந்த அகன்ற உலகத்திலேயே கிடந்து துன்பப்படுகின்றனர்.
