பாடல் #1737

பாடல் #1737: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

சத்தி தராதல மண்டஞ் சதாசிவஞ்
சத்தி சிவமிக்க தாபர சங்கமஞ்
சத்தி யுருவ மருவஞ் சதாசிவஞ்
சத்தி சிவந்தத்துவ முப்பத்து ஆறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததி தராதல மணடஞ சதாசிவஞ
சததி சிவமிகக தாபர சஙகமஞ
சததி யுருவ மருவஞ சதாசிவஞ
சததி சிவநதததுவ முபபதது ஆறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி தராதலம் அண்டம் சதா சிவம்
சத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதா சிவம்
சத்தி சிவம் தத்துவம் முப்பத்து ஆறே.

பதப்பொருள்:

சத்தி (சக்தி) தராதலம் (பூமியாகிய நிலத்திலும்) அண்டம் (அண்டமாகிய ஆகாயத்தில்) சதா (சதா) சிவம் (சிவப் பரம்பொருளும் இருக்கின்றார்கள்)
சத்தி (சக்தியும்) சிவம் (சதாசிவப் பரம்பொருளும்) மிக்க (பரிபூரணமாக) தாபரம் (சதாசிவ இலிங்கத்தில்) சங்கமம் (ஒன்றாக சேர்ந்து இருக்கின்றார்கள்)
சத்தி (சக்தி) உருவம் (உருவமாகவும்) அருவம் (அருவமாக) சதா (சதா) சிவம் (சிவப் பரம்பொருளும் இருக்கின்றார்கள்)
சத்தி (சக்தியும்) சிவம் (சிவமும்) தத்துவம் (தத்துவங்கள்) முப்பத்து (முப்பத்து) ஆறே (ஆறாகவும் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

சக்தி பூமியாகிய நிலத்திலும் சதாசிவப் பரம்பொருள் அண்டமாகிய ஆகாயத்தில் இருக்கின்றார்கள். சக்தியும் சதாசிவப் பரம்பொருளும் பரிபூரணமாக சதாசிவ இலிங்கத்தில் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றார்கள். சக்தி உருவமாகவும் சதாசிவப் பரம்பொருள் அருவமாகவும் இருக்கின்றார்கள். சக்தியும் சிவமும் முப்பத்தாறு தத்துவங்களாகவும் இருக்கின்றார்கள்.

One thought on “பாடல் #1737

Leave a Reply to Muthu KumarCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.