பாடல் #1295

பாடல் #1295: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

பூசனை செய்யப் பொருந்தியோ ராயிரம்
பூசனை செய்ய மதுவுட னாடுமால்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

விளக்கம்:

பாடல் #1294 இல் உள்ளபடி பைரவரை பூஜித்து வழிபடுவதற்கு அவருக்கு ஏற்ற மந்திரத்தை ஒரு ஆயிரம் முறை மானசீகமாக உச்சரிக்க வேண்டும். தூய்மையான தேனாலும் நீராலும் அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனம் ஜவ்வாது புனுகு ஆகிய நறுமணம் வீசும் பொருட்களை பூச வேண்டும். நெய் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறெல்லாம் செய்து வழிபட்ட பிறகு திருநீறு எடுத்து பூசிக் கொள்ள வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.