பாடல் #534

பாடல் #534: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

ஈச னடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடுஞ் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாகுமே நந்நந்தி யாணையே.

விளக்கம்:

சிவனடியார்கள் மனம் வருந்தினால் அவர்களிருக்கும் நாடும் அது தேடும் பெருமைகளும் அழிந்துபோகும். அதுமட்டுமில்லாமல் இந்திரனது ஆட்சியும் பேரரசர்களுடைய ஆட்சியும் அதற்குப் பொறுப்பாகி அழிந்துவிடும் என்பது சிவபெருமானின் ஆணையாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.