பாடல் #536

பாடல் #536: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்
கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞானிக் கொப்பே.

விளக்கம்:

ஞானத்தைப் பெற்ற குரு இருக்கும் போது அவரை விட்டுவிட்டு கர்மத்தின் வழியில் நடப்பவரை குருவாக ஏற்பது கையில் இருக்கும் மாணிக்கத்தைத் தவற விட்டுவிட்டு காலில் பட்ட கல்லை எடுத்துச் சுமப்பவரின் விதியைப் போன்றதாகும். அதுமட்டுமின்றி கையில் இருக்கும் நெய், பால், தயிரை விட்டுவிட்டு தனக்கு நன்மை தராத உணவை சாப்பிடுவது போன்றதாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.