பாடல் #511

பாடல் #511: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாலுங் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்தை நாடி விடுமவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதுஓர் பத்தலுள் ளாமே.

விளக்கம்:

உயிர்கள் தமது உள்ளத்தில் இருக்கும் தீர்த்தத்தில் மூழ்கி குளித்தால் தமக்குள் இருக்கும் இறைவன் ஒருவனை உணரலாம். அந்த இறைவனுக்கு அடியவர் போல நடித்துக் கொண்டாவது அவனோடு கலந்து அவனை அறிந்து கொள்ளுபவர்கள் எவரும் இல்லை. நதிகளுக்கும் குளங்களுக்கும் சென்று மூழ்கி எழுபவர்களது பாவ வினைகள் கிணற்றில் விட்ட ஓட்டைக் குடம் போன்றதே ஆகும்.

உள்விளக்கம்: ஓட்டையான குடத்தில் எவ்வளவு முறை அள்ளினாலும் தண்ணீர் நிற்காதது போல உலகத்திலுள்ள எத்தனை குளங்களுக்கும் நதிகளுக்கும் சென்று குளித்தாலும் பாவ வினைகள் தீராது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.