பாடல் #510

பாடல் #510: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் வொண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கிலும் வாய்க்கும்
தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே.

விளக்கம்:

கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபடும் முறையை அறிந்தவர்க்கு இறைவனின் அருள் குளிச்சியாய் தோன்றும். அவனே அந்த கோவிலில் உள்ள தீர்த்தக்குளத்தில் குளித்தால் பாவங்கள் தீர்ந்து விடும் என்றும் இறைவனை அடைந்து விடலாம் என்றும் எண்ணினால் இறைவன் பக்கத்தில் கூட நிற்க மாட்டான். அவனே மூச்சை அடக்கி அளவாக விட்டு முறைப்படி தியானம் செய்யத் தெரிந்து அதை செயல்படுத்தினால் இறைவனின் அருள் கிடைத்தாலும் கிடைக்கும். அவனே தமது உள்ளத்தில் இருக்கும் தீர்த்தத்தை உணர்ந்து தெளிந்து விட்டால் அவன் சிந்தனையில்தான் இறைவன் எப்போதுமே குடிகொண்டிருக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.