பாடல் #253

பாடல் #253: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின்பெருமை)

அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற்
பற்றிவந்து உண்ணும் பயனறி யாரே.

விளக்கம்:

உலகப் பற்றுக்களை விட்டுவிட்டு இருக்கும் ஞானிகளின் பசியாற உணவு வழங்குதல் என்பது மிகச் சிறந்த தருமமாகும். இப்படி பல தருமங்களை கல்வி முறைகளில் ஆசிரியர் போதிக்கக் கற்றுக்கொண்டு ஆனால் தானம் ஏதுவும் செய்யாமல் தமக்கு அறிவு ஞானம் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் மனிதர்கள் கிணத்தடியிலும் குளக்கரையிலும் பற்றுக்களை அறுத்த ஞானிகள் பசியோடு இருக்கின்றார்களா என்று தேடிப்பார்த்து அவர்களைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்து சாப்பிட வைப்பதால் தமக்கு கிடைக்கும் மிகப் பெரிய பயனை அறியாமல் இருக்கின்றனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.