பாடல் #251

பாடல் #251: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர்
தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர்
தாமறி வார்சிவ தத்துவ ராவர்கள்
தாமறி வாருக்குத் தமர்பர னாமே.

விளக்கம்:

நான் என்பது எது என்பதை அறிந்தவர்கள் இறைவனின் திருவடிகளைத் தினமும் வழிபடுபவர்களாகவும் தரும வழிகளை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பவர்களாகவும் சிவ தத்துவத்தின் உருவமே தாமாக இருப்பவர்களாகவும் சிவபெருமானையே தமது உறவினராகவும் கொண்டு இருப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.