பாடல் #259

பாடல் #259: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்றுங் களால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றுஅண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.

விளக்கம்:

இறைவனின் திருவடிகளையே பற்றிக்கொண்டு உலகத்திதை உண்மையை பேசி குற்றம் குறை கூறாமல் அறநெறிகளின் வழியே நடப்பது மட்டுமின்றி நம்மால் இயன்றதை வேண்டும் என்று கேட்பவர்களுக்கு மனமுவந்து கொடுப்பதும் ஆகிய இவையே முக்தி அடைந்து இறைவனை அடைவதற்க்கான வழிகள் என்று இறைவன் வகுத்தவை என்பதைத் தெரிந்துகொண்டு அந்த வழிமுறைகளை கடைபிடித்து வாழுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.