பாடல் #255

பாடல் #255: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

தன்னை அறியாது தான்நல்லன் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மையுடன் நல்ல தவஞ்செய்யும் நீரே.

விளக்கம்:

சர்வ வல்லமையுடன் உயிரை உயிரிலிருந்து பிரிக்கும் எமன் வரும் பொழுது தன்னை யாரும் அறியாமல் எடுக்க வந்த உயிர் நன்மை செய்ததா தீமை செய்ததா என்று எண்ணாமல் அந்த உயிர் உலகில் இல்லாவிட்டால் உயிரைச் சார்ந்தவர்கள் என்ன கதியாவார்கள் என்று பார்க்காமல் அது இளையவரா முதியவரா என்று ஆராயாமல் உயிரை எடுத்துச் சென்று விடுவார். சர்வ வல்லமையான எமன் வருவதற்கு முன்பு உயிரை உடலில் நிலைபெறச் செய்து இறைவனை அடையும் நல்ல தருமங்கள் நிறைந்த தவங்களை நீங்கள் செய்துவிடுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.