பாடல் #192

பாடல் #192: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறு மதனைப் பெரிதுணர்ந் தாரில்லை
கூறுங் கருமயிர் வெண்மயி ராவதும்
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.

விளக்கம்:

பட்டு நூலை சிக்கல் எடுத்து கரை வைத்து அழகு கூட்டி கண்ணும் கருத்துமாக நெய்த பட்டாடைகூட நாளாக நாளாக நைந்து ஒரு நாள் கிழிந்து போய்விடும் என்பதை உணராமல் தாம் வாங்கும் பட்டாடை எப்போதும் இருக்கும் என்று எண்ணுகின்றனர் மக்கள். நாட்கள் சென்று கொண்டிருப்பதையும் தமக்கு வயது கூடி கிழப்பருவம் வருகின்றது என்பதையும் கருப்பாக இருந்த கூந்தல் வெள்ளையாக மாறுவதையும் உணர்ந்து கொள்ளாமல் சூரியன் மறைந்து தோன்றுவதற்கு ஒரு நாள் என்று கூறும் உயிர்கள் அது குறிப்பால் தமக்கும் வாழ் நாளைக் குறைத்துக் கொண்டிருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.