பாடல் #196

பாடல் #196: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விக்கொ டுஉண்மின் தலைப்பட்ட போதே.

விளக்கம்:

பொய்யும் புரட்டும் பேசி அறவழிகளை அழிக்காதீர்கள். பொறாமையும் கோபமும் கொண்டு பிறரின் பொருட்களைப் பிடுங்கிக் கொள்ளாமல் இருங்கள். எண்ணமும் செயலும் சிறப்புடையவராக மாறி வாழ்வு சிறந்திருக்கும் போது உணவு உண்ணும்போது யாராவது வந்து பசிக்கிறது என்றால் ஒரு கைப்பிடி அளவாவது உணவை அவருக்கு அளித்தபின் உண்ணுங்கள். இப்படியெல்லாம் வாழ்ந்தால் உடல் அழிந்து உயிர் பிரிந்தாலும் இறைவனை அடைந்து பேரின்பம் அடையலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.