பாடல் #430

பாடல் #430: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை
மாயம்வைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தாயுணர்வு ஆரவைத் தானே.

விளக்கம்:

இறைவனிடமிருந்து தோன்றிய ஆன்மா தனது ஆசைகளை அனுபவித்துத் தீர்த்துக் கொள்ள செய்யும் செயலினால் சேரும் வினைகளைத் தீர்க்க மாயையை வைத்து அந்த வினைகள் தீர உடலையும் ஆன்மாவிற்கு கொடுத்துப் பிறவி எடுக்க வைக்கின்றான். பிறவி எடுத்த ஆன்மா வினைச் சுழலில் சிக்கி மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது என்கிற கருணையினால் உலகத்திலுள்ள அனைத்திலும் கலந்து இருக்கும் இறைவன் தன்னை அடையும் வழிகள் அறிந்த கலந்து குருவாய் இருக்கும் அடியார்களோடு சேர வைத்து தன்னை எப்போதும் நினைக்கக் கூடிய எண்ணத்தை வைக்கின்றான். இறைவனின் சிந்தனையிலேயே இருப்பதால் மாயை அழிந்து நான் என்கின்ற அகங்காரம் அழிந்து ஆன்மா மீண்டும் தம்மை வந்து அடையும் மெய்யுணர்வு வரச் செய்கிறான் இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.