பாடல் #275: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)
தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தானொரு வண்ணமாயென் அன்பில்நின் றானே.
விளக்கம்:
காலங்கள் தோன்றுவதற்கு முன்பே சுயமாகத் தோன்றியவனும் தம்மை அன்போடு போற்றி வணங்கி வாழ்ந்த உயிர்கள் இறந்து விண்ணுலகம் செல்லும் காலம் அவர்களோடு வழித்துணையாய் வருபவனும் தேன் அதிகமாக ஊறியிருக்கும் கொன்றை மலர்களைத் தனது இடது பாகத்தில் மாலையாக அணிந்திருப்பவனுமாகிய சிவபெருமானின் மேல் யான் வைத்திருக்கும் பேரன்பின் உருவமாகவே என்னுடன் கலந்து நிற்கின்றான்.
