பாடல் #1670

பாடல் #1670: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கு
மவமான சாதன மாகாத தாகி
லவமா மவர்க்கது சாதன நான்கு
முவமான மில்பொரு ளுள்ளுற லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிவஞானி கடகுஞ சிவயொகி கடகு
மவமான சாதன மாகாத தாகி
லவமா மவரககது சாதன நானகு
முவமான மிலபொரு ளுளளுற லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிவ ஞானிகளுக்கும் சிவ யோகிகளுக்கும்
அவம் ஆன சாதனம் ஆகாது அது ஆகில்
அவம் ஆம் அவர்க்கு அது சாதனம் நான்கும்
உவமானம் இல் பொருள் உள் உறல் ஆமே.

பதப்பொருள்:

சிவ (உண்மையான சிவ) ஞானிகளுக்கும் (ஞானிகளுக்கும்) சிவ (உண்மையான சிவ) யோகிகளுக்கும் (யோகிகளுக்கும்)
அவம் (பயனில்லாதது) ஆன (ஆன) சாதனம் (வழி முறையான சாதனங்கள்) ஆகாது (ஆகாது) அது (அவை) ஆகில் (ஆகி இருப்பதால்)
அவம் (பயனில்லாதது) ஆம் (ஆகும்) அவர்க்கு (அவர்களுக்கு) அது (அந்த) சாதனம் (வழி முறையான சாதனங்கள்) நான்கும் (சன் மார்க்கம், சக மார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம் ஆகிய நான்கும்)
உவமானம் (தமக்கு இணையான உவமையாக) இல் (எதுவும் இல்லாத) பொருள் (பரம் பொருளை) உள் (தமக்குள்) உறல் (உணர்ந்து தெளிவதால்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

உண்மையான சிவ ஞானிகளுக்கும் சிவ யோகிகளுக்கும் இறைவனை அடைவதற்கான வழி முறைகளான சன் மார்க்கம், சக மார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம் ஆகிய நான்கும் பயனில்லாதது ஆகும். ஏனென்றால் தமக்கு சரிசமமாக எதுவும் இல்லாத பரம் பொருளாகிய இறைவனை அவர்கள் தமக்குள் உணர்ந்து தெளிந்து விட்டதால்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.