பாடல் #251: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)
தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர்
தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர்
தாமறி வார்சிவ தத்துவ ராவர்கள்
தாமறி வாருக்குத் தமர்பர னாமே.
விளக்கம்:
நான் என்பது எது என்பதை அறிந்தவர்கள் இறைவனின் திருவடிகளைத் தினமும் வழிபடுபவர்களாகவும் தரும வழிகளை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பவர்களாகவும் சிவ தத்துவத்தின் உருவமே தாமாக இருப்பவர்களாகவும் சிவபெருமானையே தமது உறவினராகவும் கொண்டு இருப்பார்கள்.
