பாடல் #97

பாடல் #97: பாயிரம் – 6. அவையடக்கம்

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலு மாமே.

விளக்கம்:

என்றும் நிலைத்திருக்கும் வேதங்களைச் சொல்லுவதால் மட்டும் உணர முடியாதவனும் இனிமையான இசையோடு பாடுகின்ற அடியவர்களின் இசையினுள்ளே எழுந்தருளுகின்றவனும் படைப்புத் தொழிலைச் செய்யவேண்டி இறைவன் படைத்த பிரம்மனும் தியானிக்கும் சதாசிவமூர்த்தியை அவனது அருள்கொண்டே அவனை உணர முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.