பாடல் #95

பாடல் #95: பாயிரம் – 6. அவையடக்கம்

ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.

விளக்கம்:

எவராலும் அறிய முடியாத அளவிற்கு பெருமைகளை உடையவனும் எவராலும் அவனின் உயரத்தையும் அகலத்தையும் அறிய முடியாத அளவிற்கு அளவிடமுடியாதவனும் எவராலும் அறிந்து கொண்டு அழைத்துவிட முடியாத அளவிற்கு பெயரிடமுடியாத மாபெரும் சுடர் போன்று இருப்பவனும் தனக்கென்று ஆரம்பமும் முடிவும் இல்லாதவனுமான எம்பெருமான் சதாசிவமூர்த்தியின் அருமை பெருமைகளை அவன் அருள் மூலமே அறிந்துகொண்டு அதை யான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.