பாடல் #373

பாடல் #373: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

ஆமே ழுலகுற நின்றஎம் அண்ணலும்
தாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறு மாமணி கண்டனை
நானே அறிந்தேன் அவனாண்மையி னாலே.

விளக்கம்:

பிரம்மனும் திருமாலும் அடியையோ உச்சியையோ காண முடியாத அளவிற்கு ஈரேழு பதினான்கு உலகங்களையும் கடந்து நிற்கின்றான் எம்பெருமான் சதாசிவமூர்த்தி. அவன் தாமாகவே ஏழுலகிற்கும் தீப்பிழம்பாக நிற்கின்றான். ஏழுலகமும் வியாபித்திருக்கும் வானத்திலும் மாபெரும் ஒளிப்பிழம்பாக ஊடுருவி நிற்பவன் நீலநிறமடைந்த கழுத்தை உடைய சிவபெருமான். இறைவன் என்னை ஆட்கொண்ட இறைதன்மையாலே நானும் இதை அறிந்தேன்.

Related image

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.