பாடல் #279

பாடல் #279: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)

அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளாருக்கே அணைதுணை யாமே.

விளக்கம்:

உயிர்களின் உள்ளத்தில் தூய்மையான அன்பாக இருக்கும் இறைவனே வெளியே உடலாகவும் இருக்கின்றான். அவன் உலகத்தோற்றத்திற்கு முன்பே இருப்பவன். உலக அழிவிற்கு பின்னும் அழியாமல் இருப்பவன். இறைவனை அடைய அனைத்துவித பற்றுக்களையும் விட்ட முனிவர்களுக்கு தலைவன் அவன். தூய்மையான அன்பினுள் வந்து அமரும் அரிய பொருளான இறைவன் அன்பினை உள்ளத்தில் வைத்திருக்கும் உயிர்களுக்கு காக்கும் துணையாக எப்போதும் இருப்பான்.

One thought on “பாடல் #279

Leave a Reply to Jeyaraman GurusamyCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.