பாடல் #278

பாடல் #278: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)

நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசறிந் தேயு மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று
நச்சியே அண்ணலை நாடுகின்றி லாரே.

விளக்கம்:

தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்ற பிறப்பைக் கொடுத்த இறைவனே உயிர்களிடம் உள்ள பெருங் கருணையினால் அவர்கள் அந்த பிறப்பிலிருந்து வெளிவரும் அன்பையும் கொடுத்திருக்கின்றான். இதைத் தெரிந்து கொண்டாலும் மனிதர்கள் தங்களின் அன்பை உலகப் பற்றுகளின் ஆசையின் மேல்தான் வைக்கின்றார்களே தவிர எம்மைப் படைத்த தந்தையே எம்பெருமானே என்று இறைவனின் மேல் அன்பை வைத்து அவனை அடையும் வழியைத் தேடாமல் இருக்கின்றனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.