பாடல் #264

பாடல் #264: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

பரவப் படுவார் பரமனை ஏத்தார்
இரவலர்க் கீதலை யாயினும் ஈயார்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நன்னெஞ்சி னீரே.

விளக்கம்:

உயிர்களெல்லாம் வணங்கித் தொழும் பரம்பொருளான இறைவனை வணங்கித் தொழாதவர்கள் தர்மம் கேட்டு வருகின்றவர்களுக்கு தம்மிடம் மீதமிருப்பதிலிருந்தும் ஈ யின் தலையளவு கூட தர்மம் கொடுக்காதவர்கள் செடிகளுக்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அவற்றை வளர்க்காதவர்கள் ஆகிய இவர்கள் தங்களை நல்லவர்கள் என்று தன்னைத்தானே எண்ணிக்கொண்டு இருப்பார்கள் இவர்கள் இறந்தபின் நரகத்தில்தான் சென்று நிற்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.