பாடல் #518

பாடல் #518: இரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிலிழிவு

முன்னவ னார்கோயிற் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங் குன்றுங்
கன்னங் களவு மிகுந்திடுங் காசினி
யென்னருமை நந்தி யெடுத்துரைத் தானே.

விளக்கம்:

அனைத்திற்கும் முதலாய் இருக்கும் இறைவன் கோவில்களில் தினந்தோறும் நடக்கும் பூஜைகள் தடைப்பட்டால் அந்த நாட்டை ஆளும் மன்னனுக்குத் தீமைகள் உண்டாகும். மழை இல்லாமல் நீர் குறைந்து நாட்டின் வளம் குன்றும். பொறி வைத்து திருடும் திருடர்கள் அதிகரித்து களவு பெருகும். இவ்வாறு உலகத்தில் நடக்கும் என்று எமது குருவாய் இருக்கும் இறைவன் எடுத்துரைத்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.