பாடல் #70

பாடல் #70: பாயிரம் – 4. குரு பாரம்பரியம்

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரா னார்களே.

விளக்கம்:

எம்மிடம் சீடராக இருந்து மந்திரம் பெற்ற ஏழு பேர்களில் முதல் நால்வராகிய இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன் ஆகிய நான்கு பேர்களும், திசைக்கு ஒருவராய் நான்கு திசைகளுக்கும் நாதர்களாக இருந்து, குருவிடம் பெற்ற மந்திரத்துடன் அவர்களின் இறையனுபவமும், இறைவனின் அருளும் சேர்த்து பெற்ற அருளையெல்லாம் மற்றவர்களும் பெற்று இன்புற்றிருக்க வேண்டுமென்று, அவர்கள் நால்வரும் தேவர்களாகவும், மற்றவர்களுக்கு குருநாதர்களாகவும் ஆனார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.