பாடல் #426

பாடல் #426: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவனருள் உண்மையே.

விளக்கம்:

நித்த சங்காரத்தில் உயிர் ஸ்தூல சூட்சும சரீரங்களுடன் தொடர்பு கொண்டிருக்கும். வைத்த சங்காரத்தில் மாயையுடன் கனவு நிலையில் உயிர் ஸ்தூல உடலை விட்டு விலகி சூட்சும உடலுடன் தொடர்பு கொண்டிருக்கும். சுத்த சங்காரத்தில் மனம் எந்த எண்ணமும் இல்லாமல் செயல் ஒன்றும் இல்லாது இருக்கும். உய்த்த சங்காரத்தில் சிவன் அருளில் லயித்து இருக்கும். இதுவே உண்மையான சங்காரம் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.