பாடல் #421

பாடல் #421: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது
அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது
அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது
அங்கியவ் வீசருக்கு கைஅம்பு தானே.

விளக்கம்:

இறைவன் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பின் மூலம் பிரளய காலத்தில் பரந்து விரிந்த உலகத்தையும் அலைகள் நிறைந்த கடல்களையும் அறியாமையாகிய அசுரர்களையும் அழித்து அருளினான். இறைவனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் அதனதன் வினையின்படி அழிந்து நன்மை பெறுவதற்காக இறைவன் அழித்தல் தொழிலை செய்யும் போது நெருப்பு அவனது திருக்கரத்தில் அம்பாக இருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.