பாடல் #102

பாடல் #102: பாயிரம் – 8. குருமட வரலாறு

கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

விளக்கம்:

திருவருளும் குருவருளும் கலந்து அருளும் காலாங்கர் (காலாங்கி நாதர்) அனைவரையும் தம்பால் ஈர்க்கவல்ல அகோரர் நன்மைகளைத் தரும் திருமாளிகைத் தேவர் அனைத்திற்கும் தலைவனான நாதனைப் போற்றும் நாதாந்தர் புலன்களை வென்ற பரமானந்தர் மற்றும் போக தேவர் (போகர்) இறைவனை அடையும் வழிகளை வழங்கி மண்ணுலக உயிர்களைத் திகழச்செய்த திருமூலர் ஆகிய நாங்கள் ஏழு பேரும் இறைவனின் அருளால் என்றும் இறவா சூட்சுமநிலை பெற்றவர்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.