பாடல் #529

பாடல் #529: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை

போகமும் மாதர் புலவி யதுநினைந்
தாகமும் உள்கலந் தங்குள ராதலில்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.

விளக்கம்:

மாதருடன் கூடியும் ஊடியும் அச்சிறிய இன்பத்தையே நினைத்து அந்த வேட்கையை உள்ளத்தில் வைத்திருப்பவர்கள் வேதம் கற்று அறிந்த வேதியர்களாக இருந்தாலும் தாமே இன்னொரு உயிரை உருவாக்குகின்றோம் என்கின்ற தவறான எண்ணத்தில் சிவபெருமானைப் பற்றிய எண்ணங்களை மறந்து விடுவார்கள்.

உள்விளக்கம்: மாதர் இன்பத்தை நினைத்து இறைவனை மறப்பதும் சிவநிந்தையே ஆகும்.