பாடல் #540

பாடல் #540: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் மன்னவன்
ஞாலத் திவன்மிக நல்லனென் றாரே.

விளக்கம்:

சிவபெருமானின் திருச்சபையைச் சுற்றி இருக்கும் அழிவில்லாத தேவர்கள் அவரின் பால் போன்ற வெண்ணிற உடலின் பாதத்தைப் பணிந்து தாங்கள் முக்தி பெற வேண்டி பொறுமையுடன் காத்திருப்பார்கள். அவ்வாறு பொறுமையுடன் இருக்கும் தேவர்களை திருமாலுக்கும் ஆதிபிரம்மனுக்கும் மன்னராக இருக்கின்ற சதாசிவமூர்த்தி உலகத்தில் மிகவும் நல்லவர்கள் என்று அருளினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.