பாடல் #332

பாடல் #332: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானவா னந்தத்திற் சார்தலே.

விளக்கம்:

தேவியை வணங்குபவர்களில் சிலர் அவள் அருளைப்பெற்று மந்திர தந்திரசக்தி அடைய வேண்டும் என்று மதுவைப்படைத்து பின்பு அருந்துகின்றனர். மது அருந்துவோர் தம்மை மறப்பார்கள். தம்மை மறந்ததால் அவர்களுடைய ஆற்றல் அழியும். அருள் சக்தி என்பது இறைவன் மேல் எண்ணத்தை வைத்து சிவஞானத்தை அறிந்து அதில் நிலைபெற்று உண்மை ஞானத்தை அடைவதே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.