பாடல் #310

பாடல் #310: முதல் தந்திரம் – 22. கல்லாமை (உலக கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

கல்லா தவரும் கருத்தறி காட்சியை
வல்லா ரெனிலருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்
கல்லாதவரும் இன்பம் காணுகி லாரே.

விளக்கம்:

உலக கல்வி கற்காமல் தனது கருத்தில் உள்ளத்துக்குள்ளே இறைவனை ஒருவர் இருக்கிறார் என்று உணர்ந்து அவரை அடையும் தகுதி பெற்றவர்களுக்கு இறைவனது அருளே கண்ணாக இருந்து அவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கும். இவர்கள் எப்போதும் உலகைப்பற்றி இருக்காமல் இறைவனைப்பற்றி இருந்து பேரின்பத்தை காண்பார்கள். உலகக் கல்வியை மட்டுமே கற்றறிந்து உண்மை ஞானத்தை கற்றுக்கொள்ளாத உயிர்கள் இறைவனின் பேரின்பத்தை எப்போதும் காண மாட்டார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.