பாடல் #314

பாடல் #314: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

நில்லாது சீவன் நிலையன்றுஎன் றெண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லாத வினைத்துயர் போகஞ்செய் வாரே.

விளக்கம்:

உண்மையான ஞானத்தை கற்றவர்கள் உயிரோடு கூடிய உடல் என்றும் நிலையானது இல்லை என்று உணர்ந்து தம்மால் முடிந்த அளவு அற வழியிலும் தவ வழியிலும் சென்று இறைவனை அடைய முயற்சிக்கின்றனர். உண்மையான ஞானத்தை கற்றுக்கொள்ளாத உயிரோடு கூடிய உடல் உலக வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டு கொடுமையான வினையின் பயனால் வரும் துன்பங்களையே அனுபவித்துக்கொண்டு வாழ்க்கையை வீணாக்குகின்றனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.