பாடல் #221

பாடல் #221: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் னுள்ளத் திருக்கின்ற
கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்
தண்சுட ரோமத் தலைவனும் ஆமே.

விளக்கம்:

ஈடு இணையில்லாத அழகு பொருந்திய ஜோதியாக இருப்பவனும் அழிவு என்ற ஒன்று இல்லாத தலைவனும் எமது ஆன்மாவோடு இணைந்து எமது உள்ளத்துள் இருக்கின்றவனும் நெற்றிக் கண்ணில் நெருப்பாக இருப்பவனும் ஏழு உலகங்களையும் கடந்து எங்கும் வியாபித்து இருப்பவனும் குளிர்ந்த ஒளியைத் தரும் நிலவைத் தன் தலைமுடியில் சூடியிருப்பவனும் முறையாகச் செய்யப்படும் ஹோமத்திற்கெல்லாம் தலைவன் எம்பெருமான் சதாசிவமூர்த்தியே ஆவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.