பாடல் #182

பாடல் #182: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
காலுமவ் வீசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவருக் கின்பஞ்செய் தானே.

விளக்கம்:

தினந்தோறும் காலையில் எழுகின்ற உயிர்கள் மாலையில் தூங்கச் செல்லும் வரை பலவித செயல்கள் செய்து அவர்களின் வாழ் நாட்களை வீணாகக் கழிக்கின்றனர். அவ்வாறு வீணாக வாழ்க்கை கழிந்தபின் இறக்கும் உயிர்களை அழிக்கும் ஈசுவரன், கோபம் கொண்ட உருத்திரனைப் போலத் தெரிந்தாலும், அவனைத் தம் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்ப அன்போடு நினைத்து வாழும் உயிர்களுக்குப் பேரின்பத்தை வழங்கி அருளுவான்.

கருத்து: தினந்தோறும் பல காரியங்கள் செய்து வெட்டியாக வாழ்க்கையைக் கழித்து பின் இறக்கும்போது இறைவனைப் பார்த்து அவன் கோபத்தோடு அழிப்பவன் என்று பயப்படாமல் உயிரோடு இருக்கும்போதே இறைவனின் பெருங்கருணையைப் புரிந்துகொண்டு அவனை அன்போடு நினைத்து வழிபட்டு வந்தால் இறக்கும் போதும் அவன் பேரின்பத்தையே அளித்து அருளுவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.