பாடல் #1292

பாடல் #1292: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

நடந்து வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த வுயிரது வுண்ணும் பொழுது
படர்ந்த வுடல்கொடு பந்தாட லாமே.

விளக்கம்:

பாடல் #1291 இல் உள்ளபடி குறிப்பிட்ட திதிகளில் முறைப்படி தியானம் செய்து பைரவரை மானசீகமாக வழிபடும் போது திரிசூலத்தையும் கபாலத்தையும் தமது திருக்கைகளில் ஏந்திக் கொண்டு சாதகருக்குள்ளிருந்து பைரவர் வெளிப்பட்டு இதுவரை சாதகர் கடந்து வந்த அனைத்து தீய கர்மங்களையும் தமது திருக்கண்களால் சுட்டெரித்து அழித்து அருள்வார். அதன் பிறகு இனி வரும் தீய சக்திகளும் சாதகரை பாதிக்காதவாறு தடுத்துக் காப்பாற்றும் சக்கர அமைப்பை சாதகரைச் சுற்றி படர்ந்து இருக்கும் படி செய்து அருள்வார். இனி சாதகர் தமது வழிபாட்டைத் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அவரைச் சுற்றி படர்ந்து இருக்கும் சக்கர அமைப்பின் மூலம் இனி வரும் தீய கர்மங்களையும் நெருங்க விடாமல் பந்தாடி சாதகரால் விரட்ட முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.