பாடல் #446: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)
படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.
விளக்கம்:
ஏழு உலகங்களைப் படைத்து அவை தம் வினைகளைத் தீர்த்தபின் அவற்றை அழித்து தம்மோடு மீண்டும் சேர்த்துக் கொண்டு அருளுகின்றவன் இறைவன். ஏழு உலகங்களும் தன் தொழில்களை செய்ய பலவித தேவர்களையும் படைத்து அருளினான். பலவித உயிர்களைப் படைத்து தம் வினைகளைத் தீர்த்தபின் அவற்றை அழித்து தம்மோடு மீண்டும் சேர்த்துக் கொண்டு அருளுகின்றவன் இறைவன். அந்த உயிர்கள் தன்னை நாடி வரும்போது அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகவும் நின்று அருளுகின்றான்.
