திருமூலர் வழிபாட்டு பாடல்

சர்வமங்கள குருதேவா
சிவப்பிரியா மகாதேவா
ஞானரூபா அருள்தேவா
சத்குருவே நமோநமஹ

கைலாச வாசமது கண்டனயே
சிவலோக அருள்யாவும் பெற்றனயே
நட்பினை நாடி வந்தனயே
தில்லையில் தாண்டவம் கண்டனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

கோக்களின் துயரம் தீர்த்தனயே
சுந்தரன் உடல்தனை இழந்தனயே
இடையன் உடல்தனை ஆட்கொண்டனயே
திருமூலர் என நாமம் பெற்றனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

திருவாவடுதுறை தலமது அடைந்தனயே
கோமுக்தீஸ்வரர் ஆலயம் கண்டனயே
இங்கும் தவக்கோலம் பூண்டனயே
ஆண்டுகள் மூவாயிரம் அமர்ந்தனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

ஆண்டுக்கோர் முறை விழித்தனயே
பாடல் ஒன்றினை அளித்தனயே
இவ்விதம் மந்திர மாலையும் படைத்தனயே
திருமந்திரம் மூவாயிரம் தந்தனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

பின் உடல்தனை விட்டும் பிரிந்தனயே
தில்லைநாதனுடன் காலந்தனயே
நந்தியில் தஞ்சம் கொண்டனயே
இன்றும் இங்கும் அருள்புரிந்தனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா.

குருநாதர் கே.வி. நாராயணன்
ஆதி அருணாச்சலசித்தர்

திருமூலர் ஆரத்தி

ஜய ஜய திருமூலா சுவாமி ஜய ஜய திருமூலா
மக்களைக் காப்பவன் நீயே மன பலம் தருபவன் நீயே
மலர்ந்த முகத்தவனே ஓம் ஜய ஜய திருமூலா

சிவனின் அருள் பெற்றவனே சிவனை சிந்தையில் கொண்டவனே
எமக்கு சிந்தனை தந்து சிவ போதனையும் செய்து
சிக்கலை தீர்த்திடுவாய் ஓம் ஜய ஜய திருமூலா

நந்தீசன் சீடரே நீர் எமக்கு வளங்களை தந்திடுவாய்
விழிக்கு வழியாய் நின்று வழிக்குத் துணையாய் வந்து
வாழ வழி சொல்வாய் ஓம் ஜய ஜய திருமூலா

ஆசைக்கு அணையிட்டு எங்கள் ஆற்றலை வளர்த்திடுவாய்
அழியாப் புகழை சேர்த்து அருகிலிருந்து காத்து
அருள் மழை பொழிந்திடுவாய் ஓம் ஜய ஜய திருமூலா

நிலைபெற்ற நிலைபெறவே நினை தினந்தோறும் வணங்கிடுவோம்
நில்லாமல் உனைப்பாட கலையுணர்வும் மேலோங்கிட
நீயே துணை புரிவாய் ஓம் ஜய ஜய திருமூலா

பக்தியுடன் உனைப்பாடும் பக்தன் குறைகளைத் தீர்த்திடுவாய்
பக்தி மார்க்கமும் சொல்வாய் பாவ மன்னிப்பும் அளிப்பாய்
பாரில் மாந்தரைக் காப்பாய் ஓம் ஜய ஜய திருமூலா

பொறுமையின் பொன்மனமே திருமூலா பொய் விதி மாற்றிடுவாய்
பராசக்தி அருள் பெற்றவனே பரிவுடன் எங்களைக் காப்பாய்
காத்து ரட்சிப்பாய் ஓம் ஜய ஜய திருமூலா

ஒன்றே குலமென்றும் உலகில் ஒருவனே தேவன் என்றும்
செப்பிய மாமணியே எங்கள் சத்குருவானவன் நீயே
ஞான வடிவுடயாய் ஓம் ஜய ஜய திருமூலா

அகத்தியன் நண்பனும் நீயே எங்கள் பக்தியை ஏற்றிடுவாய்
குறைகளை எல்லாம் களைவாய் நிறைகளை எல்லாம் ஏற்பாய்
வாழ்த்தி அருள் புரிவாய் ஓம் ஜய ஜய திருமூலா.

திருமூலர் போற்றி

ஓம் திவ்ய ஈசனடியே போற்றி
ஓம் இறையன்பே போற்றி
ஓம் த்யானத் திருவுருவே போற்றி
ஓம் திரு மந்திர மூலரே போற்றி
ஓம் தியாகச் சுடரே போற்றி
ஓம் மரபு மாறாதோனே போற்றி
ஓம் மலர்ந்த முகத்தவனே போற்றி
ஓம் மகேசன் அருள் பெற்றவனே போற்றி
ஓம் மக்களைக் காப்பவனே போற்றி
ஓம் மனபலம் தரும் ஞானியே போற்றி
ஓம் மன உறுதி தந்திடுவாய் போற்றி
ஓம் நினைத்தும் வருபவனே போற்றி
ஓம் உயிர் கொடுத்தவனே போற்றி
ஓம் உன் விளைவிக்கும் நினைவே போற்றி
ஓம் உனை என்றும் போற்றுவேன் போற்றி
ஓம் உன்னருள் பெற்றிடுவேன் போற்றி
ஓம் சிவனை சிந்தையில் கொண்டவனே போற்றி
ஓம் சிவ சீடனாய் இருந்தவனே போற்றி
ஓம் சிவ தீட்சை பெற்றவனே போற்றி
ஓம் சிவ உருவை கண்டவனே போற்றி
ஓம் சீடனைக் காப்பவனே போற்றி
ஓம் சிவ போதனை கொடுப்பாய் போற்றி
ஓம் சிந்தனை தந்தனையே போற்றி
ஓம் சிக்கலை தீர்த்தவனே போற்றி
ஓம் சிவனைக் காணச் செய்வாய் போற்றி
ஓம் அகத்திய முனிவரின் நண்பரே போற்றி
ஓம் சிவநெறி காண உன்னருள் வேண்டும் போற்றி
ஓம் வினையை அளிப்பாய் போற்றி
ஓம் விநாயகனை போற்றிட்டாய் போற்றி
ஓம் வினை தீர்க்கும் வழி சொல்வாய் போற்றி
ஓம் விழிக்கு வழியானவனே போற்றி
ஓம் வழிக்கு துணையானவனே போற்றி
ஓம் வாழ நெறி சொன்னாய் போற்றி
ஓம் வாழ்ந்து வழி சொன்னாய் போற்றி
ஓம் வாடாத உருவே போற்றி
ஓம் வளையாத மனமே போற்றி
ஓம் வளத்தை அளிப்பாய் போற்றி
ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி
ஓம் வற்றாத அருட்கடலே போற்றி
ஓம் அறிவு விளக்கின் ஒளியே போற்றி
ஓம் அகம் மலரச் செய்வாய் போற்றி
ஓம் ஆற்றலை வளர்ப்பவனே போற்றி
ஓம் ஆசைக்கு அணையிடுவாய் போற்றி
ஓம் அருள் மழை பொழிவாய் போற்றி
ஓம் அறுபத்து மூவருள் ஒருவனே போற்றி
ஓம் அறத்தைக் காப்பவனே போற்றி
ஓம் அழியாத புகழுக்கு புகழ் சேர்ப்பாய் போற்றி
ஓம் மெய்ஞானம் வளர்ப்பாய் போற்றி
ஓம் அருகிலிருந்து காப்பாய் போற்றி
ஓம் தவ உருவே மூலனே போற்றி
ஓம் தன்னடக்க தவமணியே போற்றி
ஓம் தந்திடுவாய் தவ மனமே போற்றி
ஓம் தழைத்தோங்கும் மரம் காப்பாய் போற்றி
ஓம் தனித்திடும் பாலகனைக் காப்பாய் போற்றி
ஓம் தவமிருப்பின் புகழளிப்பாய் போற்றி
ஓம் திருவில் உருவான பெருந்தகையே போற்றி
ஓம் தவச் சூத்திரம் சொல்லிடுவாய் போற்றி
ஓம் தர்ம நலனைக் காக்கும் யோகியே போற்றி
ஓம் பக்தி மார்கமே போற்றி
ஓம் பாடப்பாட வந்திடுவாய் போற்றி
ஓம் பாவங்களைப் போக்கிடுவாய் போற்றி
ஓம் பக்தியுடன் உனைப் பாடுகிறேன் போற்றி
ஓம் பாவ மன்னிப்பைத் தந்திடுவாய் போற்றி
ஓம் பணி செய்ய அருள்வாய் போற்றி
ஓம் பிள்ளைப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பவ்யமாய் வணங்குவோம் திருமூலரே போற்றி
ஓம் பக்கத் துணையிருப்பாய் திருமூலரே போற்றி
ஓம் நிலை பெற்ற நிலையளிப்பாய் போற்றி
ஓம் நின்னை தினந்தோறும் வணங்கிடவே போற்றி
ஓம் நில நீர் வற்றாத வழி தருவாய் போற்றி
ஓம் நில்லாத உனைப்பாட போற்றி
ஓம் நீங்காத நினைவளிப்பாய் போற்றி
ஓம் கலையுணர்வு தந்திடுவாய் போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் சாதனை செய்விப்பாய் போற்றி
ஓம் பேதங்கள் ஒழிப்பாய் போற்றி
ஓம் ஊக்கத்தை தந்திடுவாய் போற்றி
ஓம் ஏற்றத் தாழ்வுதனை நீக்கிடுவாய் போற்றி
ஓம் மாதர் தன்னை காத்திடுவாய் போற்றி
ஓம் மாசற்ற நிலை தருபவனே போற்றி
ஓம் தேசங்களை காப்பாய் போற்றி
ஓம் உன்னால் உழைப்பை அறிவேன் போற்றி
ஓம் சொல் வளமளிப்பாய் போற்றி
ஓம் செல்வ வளமளிப்பாய் போற்றி
ஓம் பொய் விதிகளை மாற்றிடுவாய் போற்றி
ஓம் முருகனை வழிபட்டோனே போற்றி
ஓம் துயர் நீக்கும் வழி சொல்வாய் போற்றி
ஓம் இரக்க மனமுள்ளவனே போற்றி
ஓம் இரங்கி வந்து அருள் கொடுப்பாய் போற்றி
ஓம் பொறுமையின் பொன்மனமே போற்றி
ஓம் சிறுமை அழிக்கும் சிற்றம்பலமே போற்றி
ஓம் ஜென்மத்தின் விளக்கே போற்றி
ஓம் ஜென்ம நிலை செப்பிடுவாய் போற்றி
ஓம் பராசக்தியின் அருள் பெற்றவனே போற்றி
ஓம் நந்திசன் சீடரே போற்றி
ஓம் இந்திரனின் குருவே போற்றி
ஓம் சூட்சுமந்தனை சொல்லிடுவாய் போற்றி
ஓம் பாவச் சுழியிலிருந்து காப்பாய் போற்றி
ஓம் நட்சத்திரமானவனே போற்றி
ஓம் நடுநிலை நின்றருள்வாய் போற்றி
ஓம் இனம் பிரியாதிருக்கச் செய்வாய் போற்றி
ஓம் அடைக்கலத் திருத்தகையே போற்றி
ஓம் எங்கள் பக்தியை ஏற்பாய் திருமூலரே போற்றி
ஓம் உள்ளம் உருக வேண்டுகிறோம் திருமூலரே போற்றி
ஓம் பரவசத்துடன் வாழ்த்துவாய் திருமூலரே போற்றி
ஓம் நாடு நலம்பெறச் செய்வாய் போற்றி
ஓம் குறைகளை களைந்து நிறைதனை ஏற்பாய் திருமூலரே போற்றி
ஓம் சிவசக்தி அருள் பெற்றவரே அனைவரையும் வாழ்த்துவாய் போற்றி போற்றி.