பாடல் #553: மூன்றாம் தந்திரம் – 2. இயமம் (தீயவற்றிலிருந்து விலகி இருப்பது)
எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.
விளக்கம்:
பவளம் போல் ஜொலிக்கும் குளிர்ந்த சடையுடைய இறைவனை முழுமையாக உணர்ந்த சனகர், சதானந்தர், சனாநந்தர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நால்வர்களுக்கும் எட்டுத்திசையிலும் சூழ்ந்து மூழ்கும் அளவிற்கு பெருமழை பெய்தாலும் செழுமையான குளிர்ந்த இயமங்களை (பாடல் #552 இல் இயமத்தின் விளக்கம் காண்க) தவறாமல் செய்யுங்கள் என்று இறைவன் கூறினார்.
![](https://i0.wp.com/www.kvnthirumoolar.com/wp-content/uploads/2019/08/lord-shiva-enshrined-as-linga-bal-krishna-lord-krishna-E05305a811dc78526b1c657a0f02dba5b.jpg?resize=461%2C750&ssl=1)