பாடல் #304

பாடல் #304: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
நேசமும் ஆகும் நிகழொளி யாய்நின்று
வாசமலர்க் கந்தமாய் மன்னிநின் றானே.

விளக்கம்:

இறைவன் அருளால் வரும் இறப்பும் பிறப்பும் எப்படி வருகிறது என்று தனக்குள் பேசி கேள்வி கேட்டு பிதற்றி அந்த கேள்வி ஞானத்தால் பதில் கிடைக்கும் பேரின்பத்தில் திளைத்து இருந்தால் வாசனை மிக்க மலர்களில் கலந்திருக்கும் நறுமணம் போல பேரொளியாய் திகழும் இறைவனும் நம்மோடு கலந்து நிற்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.