பாடல் #1008

பாடல் #1008: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர்
வேண்டார்கள் கன்ம மதிலிச்சை யற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோ ராய்ந்தன்பே.

விளக்கம்:

இறைவன் ஆட்கொண்ட அடியவர்கள், இறைவனை அடைய வேண்டி மேலும் மேலும் கர்மங்களை சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள், மிகப்பெரிய சிவ யோகிகள், இறைவன் மேல் மிகவும் ஆழ்ந்த அன்பு கொண்டவர்கள் ஆகியோர் அருச்சினை செய்ய விரும்ப மாட்டார்கள்.

குறிப்பு: நீண்ட காலம் அருச்சினை செய்து இறையருளை பெற்றவர்களும் சிவ சிந்தனையிலேயே இருக்கும் யோகிகளும் அருச்சினை செய்யும் அவசியம் இல்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.