பாடல் #52

பாடல் #52: பாயிரம் – 2. வேதச் சிறப்பு

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதம் விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

விளக்கம்:

வேதங்கள் ஓதுபவர்கள் அனைவரும் வேதியர்கள் ஆக மாட்டார்கள். வேதங்களின் அர்த்தங்களை உணர்ந்து அதன்படி நடப்பவர்களே உண்மையான வேதியர்கள் ஆவார்கள். இறைவன் வேதங்களை வழங்கியது உயிர்கள் அறங்களை தெரிந்து கொண்டு அதன்படி நடந்து உண்மைப் பொருளான இறைவனை உணர்ந்து மெய்ப்பொருளான இறைவனை அடைவதற்க்காகவே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.