பாடல் #368

பாடல் #368: இரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (சக்கரத்தின் தத்துவம்)

சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைத் தரிக்கஒண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்கநற் சக்தியைத் தான்கூறு செய்ததே.

விளக்கம்:

பாடல் #367ல் உள்ளபடி இறைவனிடம் பெற்ற உலகைக்காக்கும் வலிமை மிக்க சக்கரத்தை தனது கரத்தில் தாங்கும் சக்தி இல்லாததால் திருமால் அனைத்திலும் மேலான வலிமையுடைய இறைவனை அன்புடன் அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்ள அவனது வேண்டுதலுக்கு மனமிறங்கிய இறைவனும் தனது சக்தியிலிருந்து ஒரு பகுதியை திருமாலுக்குக் கொடுத்து சக்கரத்தைத் தாங்கும் வல்லமை பெறச்செய்து அருளினான்.

Related image

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.