அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #77

21-4-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீகத்தில் விடுவது பெறுவது முக்கியமானது என கூறுவோறும் உண்டு அது எவ்விதம் விடுவது பெறுவது?

ஆன்மீகத்தில் விடுதல் என கூறினால் முதன்மையில் தீயவை யாவையும் விடுதல் வேண்டும் என்கின்ற சட்டம் உண்டு. இதில் எவ்வித விதிவிலக்கும் இல்லை. இரண்டாவதாக சர்வ ஆசைகளையும் விடுதல் வேண்டும். இதற்கு விதிவிலக்கு ஒன்று இறை நாட்டம். மூன்றாவது ஐம்புலன்களினால் நேரிடக்கூடிய கோபதாபங்கள் எண்ணங்கள் என்பதெல்லாம் விடுதல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. இதற்கு விதிவிலக்கு சிறு அளவு ஆகாரமும் நீரும் ஆகும். பெறுதல் என்பது என்ன என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை. முதன்மையில் அறிவு, அறிவை தொடர்வது ஞானம், ஞானத்தை தொடர்வது அருள், அருளை தொடர்வது முக்தி என்கின்ற வரிசையில் செல்லும் மனதில் முன்கூறிய விடுதல்கள் எற்பட அந்த உடலில் இடம் வெறுமையாக இருக்க அந்த வெறுமையான இடத்தில் பெறுதலுக்கூறிய நற்குணங்கள் சென்று நிரம்பிட உடலில் ஓர் விசேஷ ஆனந்தம் காணக்கூடும். இப்பேரானந்தம் அடைந்திட பொலிவு என்கின்ற அத்தேஜசை அடையலாம். மனம் ஓர் நிலைப்பட்டு என்றும் ஆனந்த நிலையில் இருக்கும் இது தான் விடுதல் பெறுதல்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.