அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #18

11-9-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தெய்வங்கள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர் மனிதர்கள் செய்யும் தவறுகளை அறிவார்கள் ஏனெனில் அவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். அவர்கள் மௌனம் சாதிப்பதை அறியாமை என எண்ணுதல் வேண்டாம். முதன் முறையாக செய்திடும் தவறுகளை மன்னிப்பர். இரண்டாம் முறையாக தவறுகள் செய்தால் பணவிரயம், உடல் நலக்குறைவு, இவற்றால் அவதியுற வேண்டி இருக்கும். இதனை உணராமல் மேலும் தவறுகள் செய்தால் அது சிவ தண்டனையாக பெருமளவிற்கு இருக்கும் இதனை அறிந்து மனிதர்கள் செயலாற்ற வேண்டும். குறிப்பாக தெய்வீக பணிகளில் ஈடுபடுவோர் பெரும் சிரத்தையுடன் செயல்படுவதுடன் தெரிந்து தவறுகள் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.