அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #27

9-7-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மந்திரங்கள் ஜெபிக்கும் காலங்களில் எண்ணிக்கை வைப்பது அவசியம்தானா?

ஆன்மீக நிலையில் இவ்வித எண்ணிக்கை வைப்பது அவசியமற்றது ஆகும். எண்ணிக்கையை விட மன ஒரு நிலைப்பாடு முக்கியமாகின்றது. இருப்பினும் மந்திரங்கள் சித்தி (பயன்) பெற்று பிரயோகம் (செயல்படுத்த) காண விரும்பும் சிலர் எண்ணிக்கை வைப்பதும் உண்டு. குறிப்பாக ஒரு இலட்சம், இருபத்தி ஐந்தாயிரங்கள் ஜெபித்தால் சித்தி (பயன்) என கூறுவர். ஐம்பது இலட்சம் ஜெபித்தாலும் மன ஒரு நிலைப்பாடு இல்லையேல் சித்தி ஆகாது (பயன் தராது) என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும். எண்ணிக்கைதனை மன சிரத்தையுடன் மனதினை ஒரு நிலைப்படுத்தி ஜெபித்து வர சிறு நற்பலன் தரும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.