அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #16

18-7-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நான் என்பது அகங்காரம் என்றால் எதார்த்தத்தில் எவ்விதம் நடப்பது? அதாவது நான் என்ற சொல் இல்லாமல் தன்னை அறிமுகப்படுத்தும் போது என்பெயர் இது நான் இது என்று ஆரம்பிக்கின்றோம் எதார்த்த நிலையில் நான் இல்லாமல் வாழ முடியாது அப்படியானால் எப்படி வாழ்வது?

நான் என்ற வார்த்தையில் தவறில்லை நான் என்கின்றதை இயற்கையிடம் கோர்த்திடவே பிழை ஆகின்றது. நான் என்பது மற்றவர்களிடம் ஒப்பிட்டு நான் சிறப்பானவன் எனவும் மற்றவர்கள் இதில் எளியோர் என காண்பது தவறாகும். இவ்விதமே அகங்காரம் பிறவி காண்கிறது. மற்ற உயிர்கள் அனைத்திலும் இறை நிலையை கண்டால் இவ்விதம் அகங்காரம் வளர்வதில்லை. பின்பு நான் என்பதில் பிழையும் இல்லை. நான் பெரியவன் மற்றவர் எல்லாம் தாழ்ந்த நிலையில் உள்ளனர். நான் சிறப்பானவன் மற்றவர் எளியோர். நான் செல்வந்தன் மற்றவர்கள் ஏழைகள். நான் கல்வியில் சிறந்தவன் மற்றவர்கள் மூடர்கள் என்பதெல்லாம் எண்ணத் துவங்கினால் அகங்காரம் வளரும். வார்த்தையில் பிழையில்லை நாம் அதை உபயோகிக்கும் மனநிலையில் தவறாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.