அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #57

29-8-2010 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இந்து மதத்தில் தெய்வங்களின் வடிவம் செய்யும் போது அனைத்திலும் நாகங்கள் உள்ளனவே இதற்கு காரணங்கள் உண்டா?

இந்த நாகமானது உடலுக்குள் மூலாதாரத்தில் சுருண்டிருக்கும் குண்டலினி சக்தியாகின்றது. தெய்வநிலை அடைய வேண்டும் என்ற எண்ணம் படைத்தால் அந்த சக்தியினை உச்சந்தலைக்கு கொண்டு வந்து நாம் அடக்க வேண்டும் என்பது பொருள். தெய்வ வடிவங்களில் உள்ள நாகங்களை நன்றாக பார்த்தால் ஒவ்வொரு ஸ்ததியில் (இடத்தில்) இருக்கும். ஒன்று மாலவன் ஆசனத்திலும் மற்றொன்று ஈஸ்வரன் மாலையாகவும் அணிந்திருப்பார். பிள்ளையாரோ தன் துண்டுகள் விழாதிருக்க இடுப்பில் இறுக்கி கட்டி கொண்டிருப்பார். இவ்விதம் பல பல வடிவங்களில் நாகங்களை காணக்கூடும். இதற்கு தெய்வங்களுக்கு நாகங்கள் அடங்கி இருக்கின்றது என்பதே பொருளாகின்றது. இவ்விதம் தெய்வ நிலைகளை அடைதல் வேண்டும் இல்லை அந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற மனம் படைத்தால் நம்முள்ளிருக்கும் அச்சக்தியை எழுப்பி மேல் நிறுத்தி அடக்குதல் வேண்டும் என்பதே பொருளாகின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.